Followers

Mar 31, 2018

[CA] முக்கிய நிகழ்வுகள் [31-03-2018]


*தமிழகம்*
# காவிரி விவகாரத்தில் மேலாணமை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று தாக்கல் செய்கின்றனர் தமிழக அதிகாரிகள்
- உச்ச நீதிமன்றம் அறிவித்தவாறு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 3-ம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முதல்வர், திரு. எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்
- ஏப்ரல் 11 – ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: விவசாய சங்கங்கள்
- ஏப்ரல் 1 – ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்; தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும்: தி.மு.க.
- தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
*இந்தியா*
# சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான வினாத்தாளும், 10-ம் வகுப்புக்கான கணிதப் பாடத்துக்கான வினாத்தாளும் தில்லி உட்பட வட மாநிலங்களில் சமூக வளைத்தளங்க்ளில் வெளியானது; இதனால் மறுத்தேர்வுக்கு உத்தரவிட்டது அரசு; இதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான கணிதப் பாடத்துக்கான மறு தேர்வு தேவைப்பட்டால் ஜூலை மாதம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
# இந்திய ரயில்வே தூறையில் 90 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பம்
# நாடு முழுவதும் சிறைச்சாலைகள் 600 சதவீதத்திற்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டு நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது: உச்ச நீதிமன்றம்; இதுகுறித்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதிலை அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது
# மகாராஷ்ட்ரா: முதல்வர் அலுவலகத்தில் தினமும் 18, 500 கோப்பை தேநீர் விநியோகம் நடக்கிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது
# மகாராஷ்ட்ரா: புனே நகரில் போக்குவரத்து விதி மீறலை தடுக்கும் நடவடிக்கையாக எதிர்திசையில் வாகனம் ஓட்டினால் டயரை பஞ்சாராக்கும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது
# அசாம்: காசிரங்கா தேசியப் பூங்காவில் புதிதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2, 413 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது கடந்த 2015-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை விட 12 கூடுதலாகும்
# அசாம்: “181-சகி” என்ற இலவச தொலைப்பேசி எண்ணை பெண்களின் பாதுக்கப்புக்காக அறிமுகப்படுத்தியுள்ளது அரசு
# மத்திய பிரதேசம்: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62ஆக உயர்த்தியது அரசு
# உத்திர பிரதேசம்: இந்தியாவின் மிக நீளமான சாலை வழி பாலம் காசியாபாத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது (ஹிண்டான் பாலம்); காசியாபாத்திற்கும் தில்லிக்குமான போக்குவரத்து நெரிசலை இது குறைக்கும்
# மேற்கு வங்காளம்: பத்திரிக்கையாளர்களுக்கு மாத பென்சன் தொகையாக ரூ. 2, 500 வழங்க அரசாங்கம் முடிவு
*வெளியுறவு*
# அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாண சட்டமன்றம் ஏப்ரல் மாதத்தை “சீக்கியர்களின் விழிப்புணர்வு மற்றும் அவர்களை கெளரவப்படுத்தும் மாதமாக” (Sikh Awareness and Appreciation Month) கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது; சமீபத்தில் சீக்கயர்களுக்கு எதிரான வன்முறை இந்த மாகாணத்தில் நிறைய நடந்துள்ளதால், இதனை செய்துள்ளது அந்த மாகாண அரசு
*உலகம்*
# சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ்: அமெரிக்க அதிபர், திரு. டொனால்ட் ட்ரம்ப்
# மியான்மர்: அரசமைப்பு சாசனம் திருத்தப்படும் – புதிய அதிபர், திரு. வின் மையிண்ட்
# ரஷ்யா: உளவுத் துறை அதிகாரி மீதான ரசாயனத் தாக்குதல் விவகாரத்தில் பதிலடியாக, அமெரிக்க தூரரக அதிகாரிள் 60 பேர் உட்பட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 150 அதிகாரிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது
# அமெரிக்கா: செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆழமான பகுதிகளை பற்றி ஆராய்வதற்காக “இன்சைட்” (InSight: Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport) என்ற செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது நாசா அமைப்பு
*பொருளாதாரம்*
# அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயு (LNG) நிரப்பப்பட்ட கப்பல் இந்டியாவுக்கு வந்தது. அமெரிக்காவிலிருந்து LNG இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுவது இது முதல் முறையாகும்; முதலாவது கப்பல் “எம். வி. மெரிடியன்” 25 நாள் பயணத்துக்குப் பிறகு மகாராஷ்ட்ரா மாநிலம் தபோல் மின்னுற்பத்தி நிலையத்துக்கு வந்தது
*விளையாட்டு*
# 2018க்கான சந்தோஷ் கோப்பை இறுதி போட்டி மேற்கு வங்காளம் மற்றும் கேரளா அணிகளுக்கு இடையே நடைபெறும்
*இதர*
# இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் வெளியிட்டுள்ள சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் பட்டியலில், பிரதமர், திரு. நரேந்திர மோடி முதலிடத்துள்ளார்
(1) திரு. நரேந்த்ர மோடி - பிரதமர்
(2) திரு. அமித் ஷா – பா.ஜ.க. தலைவர்
(3) திரு. தீபக் மிஸ்ரா – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
(4) திரு. மோகன் பகவத் – ஆர்.எஸ்.எஸ். தலைவர்
(5) திருமதி சோனியா காந்தி – தலைவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி


No comments:

Post a Comment